News
முல்லைத்தீவு, துணுக்காய் வலய தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கல் 16.03.2019

முல்லைத்தீவு, துணுக்காய் வலய தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கல் 16.03.2019

ஆறுதல் நிறுவனத்தின் ஊடாக MIOT  நிதி அனுசரணையுடன் தேவையை நோக்கிய பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன .

முல்லைத்தீவு வலயப் பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப்பிரிவின் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.சுப்பிரமணியம் தலைமையில் 2019.03.16 (சனிக்கிழமை) அன்று மு.ப 10.00 மணிக்கு முல்லைத்தீவு வலய அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முல்லைத்தீவு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி.உமா புவனராஜ் அவர்களிடம் இருந்து 11 மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளைப் பெற்றுக் கொண்டனர். 

பிற்பகல் 2.00 மணிக்கு மு/யோகபுரம் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்விற்கு துணுக்காய் வலய முன்னாள் ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப்பிரிவின் உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இந் நிகழ்வில் ஆறுதல் நிறுவன அலுவலர்களால் 23 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. 

முல்லைத்தீவு கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.சிறி புஸ்பநான் ஆறுதல் நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் திரு.கந்தராஜ் நிகழ்ச்சி திட்டமிடல் அலுவலர் திரு.சு.திருக்குமாரன் ஆகியோருடன் முல்லைத்தீவு துணுக்காய் வலயப்பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.